×

செங்கல்பட்டில் மூதாட்டியிடம் நகை திருட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், மூதாட்டியிடம் மூன்று சவரன் நகை திருடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அடுத்த கொத்திமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்து (90). இவரது மனைவி ராஜேஸ்வரி (80). இவர்கள் கண் பரிசோதனைக்காக நேற்று செங்கல்பட்டு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மருத்துவமனைக்கு வந்து கண் பரிசோதனை முடித்துக்கொண்டு, வீடு திரும்புவதற்காக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கொத்திமங்கலம் செல்ல பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது ராஜேஸ்வரியின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின்பேரில் செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post செங்கல்பட்டில் மூதாட்டியிடம் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Muthu ,Kothimangalam ,Tirukkalugunram ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...